மும்பை பில்டர் கொலை: சிசிடிவி கேமராவில் பதிவான துப்பாக்கிச்சூடு...

Subscribe to Oneindia Tamil

CCTV captures daylight murder in Vashi
மும்பை: மும்பை நகரில், மக்கள் போக்குவரத்து அதிகமுள்ள இடத்தில், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை, ஒருவர் துப்பாக்கியால் சுடும் நேரடி காட்சிகள் சி.சி.டி.சி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

எஸ்.கே பிரதர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான சுனில் குமார் லொஹாரியா, நவிமும்பையின் வஷி பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த போது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

காலை 8 மணியளவில், தனது காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, அலுவலகத்தை நோக்கி சுனில்குமார் நடந்து சென்றார். அப்போது பாதுகாவலர் உடையணிந்த ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் 6 முறை சுடுகிறார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னர், தரையில் சரிந்து விழுந்த சுனில் குமாரை, மற்றொரு நபர், தலையில் தாக்குவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

அலுவலகத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர்.எனினும் ஒருவர் தப்பியோடி விட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வழியிலேயே சுனில் குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+