சென்னையை இரவில் உலுக்கிய இடி, மின்னல், மழை

Subscribe to Oneindia Tamil

Rain
சென்னை: அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது இன்றும் நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கடுமையான இடி, மின்னலால் மக்கள் பீதியடையும் நிலை ஏற்பட்டது.

அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, லட்சத்தீவுகளுக்கும் ராஜஸ்தானுக்கும் இடையே நீடித்திருந்தது. அது தற்போது தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது வலுவிழந்த நிலையில் இருந்தாலும் கூட மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வட தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யலாம்.

தென் தமிழகத்தில், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்பட மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த இடியும், மின்னலுமாக இருந்தது. சில இடங்களில் நல்ல மழையும், சில இடங்களில் லேசான மழையும் காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+