தண்ணீர் தர மாட்டோம் என்று இனி கர்நாடகம் சொல்ல முடியாது!

இதுதொடர்பான தெளிவான உத்தரவு மத்திய அரசின் அறிவிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதாவது, மேல் பகுதி பாசன மாநிலமானது, தனது சுய தேவைக்காக, கீழ்ப் பகுதி பாசன மாநிலங்களின் நீர் உரிமையை தடுக்க முடியாது என்று மத்திய அரசின் அறிவிக்கை தெளிவாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கலந்து ஆலோசனை நடத்தி, காவிரி நீர் நிர்வாக வாரியத்தின் சம்மதத்துடன் நீர்ப் பங்கீட்டில் மாற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி விரைவில் ஒரு நிர்வாக வாரியம் அமைக்கப்படும். வாரியத்திற்கு தலைவர், 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். மத்திய அரசே இவர்களை நியமிக்கும்.
தலைவர் பதவியில் நியமிக்கப்படுவர் நீர் வள நிர்வாகத்தில் குறைந்தது 20 வருட அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்.
முழு நேர உறுப்பினர்கள் இருவரில் ஒருவர் நீர்ப்பாசனத்துறையில் 15 ஆண்டு காலம் பொறியாளராக, தலைமைப் பொறியாளராக பணியாற்றியிருக்க வேண்டியது அவசியம்.
பகுதி நேர உறுப்பினர்களில் ஒருவர் மத்திய நீர்வளத்துறையிலிருந்தும், இன்னொருவர் விவசாயத்துறையிலிருந்தும் நியமிக்கப்படுவர்.
வெள்ளையர் ஆட்சி ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும்
அரசு கெஜட்டில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகியதைத் தொடர்ந்து அது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து ஏற்கனவே வெள்ளையர் ஆட்சியில் 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்து விடும்.
-
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா?












Click it and Unblock the Notifications