தண்ணீர் தர மாட்டோம் என்று இனி கர்நாடகம் சொல்ல முடியாது!

Subscribe to Oneindia Tamil

Karnataka cannot deny water to Tamil Nadu
சென்னை: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இனிமேல் தமிழத்திற்குரிய காவிரி நீரை தர முடியாது என்று கர்நாடக அரசு சொல்ல முடியாது.

இதுதொடர்பான தெளிவான உத்தரவு மத்திய அரசின் அறிவிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதாவது, மேல் பகுதி பாசன மாநிலமானது, தனது சுய தேவைக்காக, கீழ்ப் பகுதி பாசன மாநிலங்களின் நீர் உரிமையை தடுக்க முடியாது என்று மத்திய அரசின் அறிவிக்கை தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இருப்பினும் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கலந்து ஆலோசனை நடத்தி, காவிரி நீர் நிர்வாக வாரியத்தின் சம்மதத்துடன் நீர்ப் பங்கீட்டில் மாற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி விரைவில் ஒரு நிர்வாக வாரியம் அமைக்கப்படும். வாரியத்திற்கு தலைவர், 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். மத்திய அரசே இவர்களை நியமிக்கும்.

தலைவர் பதவியில் நியமிக்கப்படுவர் நீர் வள நிர்வாகத்தில் குறைந்தது 20 வருட அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்.

முழு நேர உறுப்பினர்கள் இருவரில் ஒருவர் நீர்ப்பாசனத்துறையில் 15 ஆண்டு காலம் பொறியாளராக, தலைமைப் பொறியாளராக பணியாற்றியிருக்க வேண்டியது அவசியம்.

பகுதி நேர உறுப்பினர்களில் ஒருவர் மத்திய நீர்வளத்துறையிலிருந்தும், இன்னொருவர் விவசாயத்துறையிலிருந்தும் நியமிக்கப்படுவர்.

வெள்ளையர் ஆட்சி ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும்

அரசு கெஜட்டில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகியதைத் தொடர்ந்து அது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து ஏற்கனவே வெள்ளையர் ஆட்சியில் 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+