காவிரி...கர்நாடகாவில் போராட்டம்... தமிழக பேருந்துகள் மீண்டும் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

Bus
சத்தியமங்கலம்: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திலிருந்து அந்த மாநிலத்துக்குப் பேருந்துகள் இயக்கப்படுவது 2- வது நாளாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று எப்பொழுது எல்லாம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் தொடர்ச்சியான போராட்டங்களை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன. இதேபோல்தான் தற்போது அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

இதனால் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கும் தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கும் செல்லும் பேருந்துகள் இன்றும் 2-வது நாளாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம், பண்ணாரி, ஆசனூர் வழியாக செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. ஈரோட்டிலிருந்து கர்நாடகாவுக்கு சத்தியமங்கலம் வழியாக 19 அரசு பேருந்துகளும், இதேபோல் ஓசூர் வழியாக 3 பேருந்துகளும் செல்கிறது. இந்த 22 பேருந்துகளும் இன்று நிறுத்தப்பட்டன.

கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லக் கூடிய வட தமிழக பேருந்துகளும் இன்றும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. உதகமண்டலம் வழியாக கர்நாடகா செல்லக் கூடிய மேற்கு மாவட்ட பேருந்துகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+