For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டாஸிலிருந்து தளி ராமச்சந்திரன் உட்பட 17 பேர் தப்பினர்!

By Mathi
Google Oneindia Tamil News

Ramachandran
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக நிர்வாகி பழனி கொலை வழக்கில் சிக்கிய தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ ராமச்சந்திரன் உட்பட 17 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை 5ம் தேதி கிருஷ்ணகிரி பெரியார் தி.க. பிரமுகர் பழனி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உட்பட 17 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ராமச்சந்திரன் உட்பட 17 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கே.என். பாஷா, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உரிய ஆதாரங்கள் இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் கவனிக்கவில்லை. எனவே ராமச்சந்திரன் உட்பட 17 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

English summary
The Goondas Act agains Thali MLA Ramachandran was quashed by the Madras high court on Thursday..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X