ஹைதராபாத்தில் வெடித்தது சக்தி வாய்ந்த குண்டு - டிஜிபி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று இரவு வெடிக்கப்பட்ட குண்டுகளில் இரண்டு மிகப் பயங்கரமான வெடிகுண்டுகள் என்று ஆந்திர மாநில டிஜிபி வி. தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தில்சுக் நகரில் நேற்று இரவு 7 மணிக்கு அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். 84 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு குறித்து பேசிய ஆந்திர மாநில டி.ஜி.பி தினேஷ் ரெட்டி, தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள என்றும், உயிரிழப்புகள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவை பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் வெடிகுண்டில் என்ன மாதிரியான பொருள் இருந்தது என்பது குறித்தும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+