ரூ. 1 இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாயும் கொடுத்தால் நல்லா இருக்குமே: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அண்மையில் துவக்கி வைத்துள்ள மலிவு விலை உணவு திட்டம் சென்னை மாநகர ஏழை, எளிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டம் சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் விரைவில் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று சென்னை மாநகரின் அடித்தட்டு மக்கள் விருப்பப்படுகிறார்கள்.
மதிய உணவு திட்டத்திற்கு காமராஜரும், சத்துணவு திட்டத்திற்கு எம்.ஜி.ஆரும் சிறப்பு சேர்த்தது போன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரலாற்றில் மகுடம் சூட்டும் திட்டம் தான் இந்த மலிவு விலை உணவு திட்டம்.
சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வயிற்றுப் பசி தீர்க்கும் இந்த திட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது. அதே நேரத்தில் மலிவு விலையில் வழங்கப்படும் இந்த உணவிற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயும் சேர்த்துக் கொடுத்தால் இந்த திட்டத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.