தமிழகம் பாதுகாப்பாக இருக்கிறதா... அதிகாரிகளுடன் ஜெ. ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹைதராபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஹைதராபாத் நகரில் நேற்று தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து நாட்டையே பரபர்பில் ஆழ்த்தியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று சென்னையில் உயர் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications