For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் வெறும் டெலிவரிபாய்தான்! வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மது விலக்கு குறித்து முகம்மது நபி, அண்ணல் அம்பேத்கார், மகாத்மா காந்தி ஆகியோர் கூறிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் டெலிவரி பையனாக மட்டுமே நான் இப்போது இருக்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரண்டாம் கட்ட நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த 18ம் தேதி கோவளத்தில் தொடங்கிய பயணம் இன்று 5ம் நாளை எட்டியுள்ளது.

இன்று காலை திருக்கழுங்குன்றத்தில் இருந்து வல்லம், செங்கல்பட்டு வழியாக வில்லியம்பாக்கத்தை சென்றடைகிறார். முன்னதாக நேற்று இரவு திருக்கழுங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, மது என்னும் அரக்கனை ஒழிக்க போராடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

Vaiko
மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றி முகம்மது நபி, அண்ணல் அம்பேத்கார், மகாத்மா காந்தியடிகள் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சாதாரண நபராகவே உங்கள் முன்பு இந்த நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளேன் என்றும் வைகோ கூறியுள்ளார்.
இன்று இரவு வில்லியம்பாக்கத்தில் தங்கும் வைகோ, நாளை காஞ்சிபுரம் நோக்கி நடைபயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
I am taking the messages of Prophet Mohammad, Ambedkar, Gandhi and others to the people. I am like a delivery boy, said MDMK chief Vaiko.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X