For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைதராபாத் குண்டுவெடிப்பு - தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Hyderabad Blast
ஹைதராபாத்: ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், இரடடை குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு முன் அந்தப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். அப்பகுதிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் இளைஞர் ஒருவர் ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டோ அல்லது இரு சக்கர வாகனத்தையோ, சைக்கிளையோ நிறுத்துமிடங்களில் நிறுத்தியதைப் பார்த்திருந்தாலோ பொதுமக்கள் போலீசுக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும் தகவல் அளிக்கும் நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். விசாரணையின் போது அந்நபர் அளித்த தகவலின் தன்மைக்கேற்ப ரூ5 லட்சம், ரூ10 லட்சம் அல்லது ரூ20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றார் அவர்

English summary
Police Friday announced a handsome reward for anybody providing information about the suspects seen in Dilsukhnagar before the twin blasts Thursday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X