ஹைதராபாத் குண்டுவெடிப்பு - தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், இரடடை குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு முன் அந்தப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். அப்பகுதிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் இளைஞர் ஒருவர் ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டோ அல்லது இரு சக்கர வாகனத்தையோ, சைக்கிளையோ நிறுத்துமிடங்களில் நிறுத்தியதைப் பார்த்திருந்தாலோ பொதுமக்கள் போலீசுக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் தகவல் அளிக்கும் நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். விசாரணையின் போது அந்நபர் அளித்த தகவலின் தன்மைக்கேற்ப ரூ5 லட்சம், ரூ10 லட்சம் அல்லது ரூ20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றார் அவர்












Click it and Unblock the Notifications