For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலச்சந்திரன் படுகொலை- தமிழக காங். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது

By Mathi
Google Oneindia Tamil News

Balachandran
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு துணை போனதாகக் கூறி தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை கைது செய்து சுட்டுக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. இந்தப் படுகொலைக்கு காங்கிரஸ் கட்சிதான் துணையாக இருந்தது என்பது மே 17 இயக்கத்தினர் குற்றச்சாட்டு.

இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி செயல்படக் கூடாது, அதன் அலுவலகம் மூடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை மே 17 இயக்கத்தினர் 50 பேர் முற்றுகையிட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகத்தில் காங்கிரசாரும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக இருந்தது.

English summary
Members of May 17 movement try to siege the TN Congress Committee office in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X