அமெரிக்காவில் புதைக்கப்பட்ட அணுக் கழிவுகளில் திடீர் கசிவு!

Subscribe to Oneindia Tamil

Underground Tanks At US Nuclear Plant Leaking
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான புளுடோனியம் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த புளுடோனியம் மூலமே ஜப்பான் மீது நாசகர அணுகுண்டுகளும் வீசப்பட்டன.

இந்த அணு உலை 1989-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த கூடத்தில் கதிர் வீச்சை ஏற்படுத்தக் கூடிய பல மில்லியன் லிட்டர் அணுக கழிவுகள் 200 கலங்களில் நிரப்பப்பட்டு பூமிக்கடியில் புதைத்து பாதுகாக்கப்படுகிறது. இதில் ஆறு கலங்களில் இருக்கும் அணுக் கழிவுகள் கசிவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆண்டுக்கு 1136 லிட்டர் அணுக் கழிவு கசிவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் இக் கசிவால் மக்களுக்கு எந்த பதிப்பும் இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+