பயிற்சி நோட்டைத் திருத்தாததைக் கேட்ட மாணவியின் முதுகில் குத்திய ஆசிரியர்
கோவில்பட்டி: செய்முறை பயிற்சி நோட்டைத் திருத்தாததைக் கேட்ட மாணவியை முதுகில் குத்திய ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்தவர் காளிராஜ் பாண்டியன். இவரது மகள் மாலதி. 12 வயதான இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்குப் போன மாலதி, அங்கு தனது செய்முறை பயிற்சி நோட்டை ஆசிரியர் அகஸ்டின் திருத்தாமல் தன்னிடம் கொடுத்ததைப் பார்த்து அதுகுறித்துக் கேட்டார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர், மாலதியின் முதுகில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதையடுத்து மாலதி முதுகு வலியால் துடித்தார். கூடவே காய்ச்சலும் வந்து விடச்டது. இதையடுத்து அவரை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் போலீஸில் இதுதொடர்பாக மாலதியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அகஸ்டின் தலைமறைவாகி விட்டார்.












Click it and Unblock the Notifications