பொக்ரானில் பாகிஸ்தான் உளவாளி கைது
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் பாகிஸ்தான் உளவாளி ஒருவன் கைது செய்யப்பட்டான்.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப் படை அயர்ன் பிஸ்ட் என்னும் போர் பயிற்சியில் அண்மையில் ஈடுபட்டது. இதில் மிராஜ் 2000, எம்ஐஜி 27, எம்ஐஜி 21, எம்ஐஜி 29, சி130ஜே, ஏஎன்-32 மற்றும் ஐஎல்-76 உள்ளிட்ட 225 போர் மற்றும் போக்குவரத்து விமானங்கள் கலந்து கொண்டன. இது தவிர போர் பயிற்சியில் ராக்கெட்டுகள், ஏவுகணைகள், குண்டுகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டன.
கடந்த 22ம் தேதி நடந்த பயிற்சியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோணி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பார்த்தனர். இந்நிலையில் பொக்ரானில் தங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளி சுமேர் கான்(34) நேற்று பிடிபட்டான். அவன் பாகிஸ்தான் உளவுப்படைக்கு இந்திய விமானப்படையின் அயர்ன் பிஸ்ட் பயிற்சி குறித்த ரகிசயங்களை அனுப்பி வைத்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.