மனைவியின் நடத்தையில் சந்தேகம்: நெசவுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
சேலம்: சேலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளியான போத்தன்(28). அவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் போத்தன் கடந்த சனிக்கிழமை இரவு விஷம் குடித்தார். உடனே அவரை மேட்டூர் அரசினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போத்தனின் தந்தை கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications