குஜராத்தில் என்.ஜி.ஓக்கள் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன-கிஷோர் திரிவேதி
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 28-ந் தேதி வந்துவிட்டாலே போதும்.. என்.ஜி.ஓக்களின் கோஷம் காதைப் பிளக்கும்.. இவர்களை அனுமதிக்காதீர்கள் என்று அரசுக்கு குல்பெர்க் சொசைட்டியினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக சமூகவியலாளர் கிஷோர் திரிவேதி எழுதியுள்ள கட்டுரையில், ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ந் தேதி குஜராத்தில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த கலவரத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திருக்கிறோம் என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.க்கள்) அகமதாபாத்தில் குவிந்து விடுகின்றன.
இந்த தன்னார்வ நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என்று குல்பெர்க் சொசைட்டியினர் அகமதாபாத் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றனர். பல தன்னார்வ நிறுவனங்கள் குஜராத் கலவரத்தை முன்வைத்து வெளிநாட்டில் இருந்து நிதி சேகரித்து வருகின்றன.
அண்மையில் மத்திய திட்டக் குழு உறுப்பினர் சயீதா ஹமீத் தமது வீட்டையே என்.ஜி.ஓ ஒன்றுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்திருப்பதை பாஜக தேசிய துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான பர்ஷோத்தம் ரூபலா அம்பலப்படுத்தியிருந்தார். இந்த என்.ஜி.ஓவை நடத்தி வருபவர் ஷப்னா ஹாஸ்மி.
இதேபோல் டீஸ்டா ஸ்டல்வாட் என்ற மற்றொரு என்.ஜி.ஓ. நிர்வாகி எப்படி தேச விரோத மனோபாவம் கொண்டவர் என்பதையும் அவருடன் இருந்தவரே அம்பலப்படுத்தியிருக்கிறார். அவர் எப்பொழுதும் குஜராத் அரசுக்கு எதிராகத்தான் பேசக் கூடியவர்.
குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரையில் கடந்த 3 சட்டசபை தேர்தல்களிலும் பாரதிய ஜனதா தான் வென்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பல இஸ்லாமியர்கள் பாஜகவில் இணைந்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். ஆனால் இந்த என்.ஜி.ஓக்கள்தான் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன என்று அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications