பெண்கள் பாதுகாப்பு: பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி 'நிர்பயா நிதி' ஒதுக்கிய சிதம்பரம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதால் இறந்த 23 வயது பிஸியோதெரபி மாணவியின் புனைப்பெயரில் இந்த நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
2013-2014ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக சில அறிவிப்புகளை வெளிட்டார்.
அதன் விவரம் வருமாறு,
பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதற்காக 'நிர்பயா பெண்கள் நிதி' உருவாக்கப்படும். டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதால் உயிர் இழந்த 23 வயது பிஸியோதெரபி மாணவியின் புனைப்பெயர் தான் நிர்பயா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை.
பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி துவக்கப்படும். இந்த பெண்கள் வங்கி கிளைகள் நாடு முழுவதும் துவங்கப்படும். இது இந்தியாவின் முதல் பொதுத்துறை பெண் வங்கியாக இருக்கும். இதற்காக முதல் கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும். 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 14,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வுக் கழகம் போல மேலும் 6 ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
ஜவுளிப் பூங்காங்களுக்கு ரூ. 50,000 கோடி ஒதுக்கப்படும். கைத்தறி தொழில்துறை நசிந்து போயுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட பெண்கள். கைத்தறித்துறை கடன்களுக்கான வட்டியை ரத்து செய்ய ரூ. 96,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
புதிதாக 294 எப்எம் ரேடியோ நிலையங்கள்:
புதிதாக 294 எப்எம் ரேடியோ நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 1 லட்சம் பேர் கொண்ட எல்லா ஊர்களிலும் தனியார் எப்எம் ரேடியோ ஸ்டேஷன் அமைக்கப்படும்.












Click it and Unblock the Notifications