சென்னையில் 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி டிரான்ஸ்பர்: காத்திருப்போர் பட்டியலில் 9 பேர்
சென்னை: சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பிறப்பித்துள்ளார்.
புதிதாக 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 7 இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் காவல் நிலையம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இப்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள 9 இன்ஸ்பெக்டர்களில் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சூளைமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், அயனாவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
உள்துறை சிறப்பு செயலாளராக அமுதா:
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகளிர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக இருந்த அமுதா, உள்துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.