ரேசன் அட்டை உள்தாள் ஒட்டும் பணி: மார்ச் 15 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரேஷன் அட்டையைப் புதுப்பிப்பதற்கான உள்தாள்களை ஒட்டும் பணி, மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
ரேஷன் அட்டைகளை புதுப்பிக்க உள்தாள்களை ஒட்டும் பணி, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதிவரை நடைபெற்று வந்தது. உள்தாள் ஒட்டுவதற்கு நேற்றோடு கடைசி நாள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் உள்தாள் இணைக்கும் பணியை நீட்டிக்க வேண்டும் என்று ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதையடுத்து, இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் உள்தாள் இணைக்கும் பணி மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications