அருண் ஜேட்லி போனை நாங்கள் ஒட்டுக் கேட்கவில்லை...: ஷிண்டே

அருண் ஜேட்லியின் தொலைபேசி ஒட்டுக்கேட்பதாகக் கூறப்படும் விவகாரத்தை ராஜ்யச்பாவில் பாஜக கடந்த வாரம் எழுப்பியது. இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகள் முடங்கின. மாஃபியா ஸ்டைலிலும் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலிலும் மத்திய அரசு செயல்படுகிறது என்று பாரதிய ஜனதா சாடியிருந்தது.
இந்நிலையில் அருண்ஜேட்லியின் தொலைபேசி விவரங்களை சேகரிக்க முயன்றதாக செவ்வாய்க்கிழமையன்று தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த அனுராக் சிங் கைது செய்யப்பட்டார். அவருடன் டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் அரவிந்த் தபாஸ், நீரஜ், நிதீஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து இன்று ராஜ்யசபாவில் விளக்கம் அளித்த சுஷில்குமார் ஷிண்டே, அருண் ஜேட்லியின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படவில்லை. சிலர் அருண் ஜேட்லியின் தொலைபேசி விவரங்களை சேகரிக்க முயன்றுள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் அந்த விவரங்களைப் பெற முடியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications