Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாரடைப்புக்கு காற்று மாசும், ஓசோன் மண்டல ஓட்டையும் காரணம்: ஆய்வில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

அதிக அளவில் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதற்கு காற்று மாசும், ஓசோன் அளவும் தான் காரணம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹூஸ்டனைச் சேர்ந்த ரைஸ் பல்கலைக்கழக புள்ளியில் நிபுணர்களான காத்தரீன் என்சார் மற்றும் லோரன் ரான் ஆகியோர் கடந்த எட்டு ஆண்டு கால புள்ளிவிவரத் தகவல்களை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் இதனை கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் எப்போதெல்லாம் காற்று மாசு அதிகரித்திருந்ததோ அப்போதெல்லாம் ஹூஸ்டன் நகர மருத்துவமனைகளில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

கோடையில் அதிகம்

மாரடைப்பு ஏற்பட்ட இறந்தவர்கள் குறித்த விவரத்தை ஆய்வு செய்தபோது அதில் 90 சதவீதம் பேர் கடுமையான கோடை காலத்தில்தான் இறந்துள்ளனர் என்று தெரிய வந்தது. இதற்கு ஓசோன் அளவு கடும் கோடைகாலத்தில் மிகவும் குறைவாக இருந்தது காரணமாகஇருக்கலாம் என்பது இவர்களின் வாதம்.

ஓசோன் ஓட்டை முக்கிய பங்கு

காற்று மாசு அதிகரித்தபோது கிட்டத்தட்ட 11,000 பேர் மாரடைப்பு காரணமாக ஹூஸ்டன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காற்று மாசுடன் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையும் கூட மாரடைப்பு ஏற்படமுக்கியப் பங்கு வகிப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.

ஆக்ஸைடு வாயுக்களின் ஆதிக்கம்

காற்று மாசடைவதற்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதே காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல நைட்ரஜன் டைஆக்ஸைடு, சல்பர் டைஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றின் அளவும் கூட மாரடைப்பு ஏற்பட்டவர்களை கணிசமாக பாதித்துள்ளதாம்.

இந்தியாவில் கடும்பாதிப்பு

உலக அளவில் காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகள் வரிசையில் முக்கிய இடத்தில் இருக்கிறது இந்தியா. மேலும் இங்கு மாரடைப்பு ஏற்பட முக்கியமான 5வது காரணமாக காற்று மாசு திகழ்கிறது.
அதிலும் டெல்லிதான் மிக அதிக அளவில் காற்று மாசுடன் திகழும் நகராக உள்ளதாம்.

வட மாநிலங்களில் மாசு

இந்தியாவில் அதிக காசு மாற்று உள்ள நகரங்களாக டெல்லி, காசியாபாத்,குவாலியர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்க்பும் மாவட்டம் மற்றும் ராய்ப்பூர் ஆகியவை விளங்குகின்றன.

6 மடங்கு அதிகம்

இந்தியாவில் 6.2லட்சம் பேர் காற்று மாசு காரணமாக பிறப்பதற்கு முன்பே மரணத்தைசந்தித்துள்ளனர். இது கடந்த 2000மாவது ஆண்டிலிருந்து 6 மடங்கு அதிகமாகும்.

உயர் ரத்த அழுத்தம்

இந்தியாவைப் பொறுத்தவரை மாரடைப்பு ஏற்பட முதல் காரணம் உயர் ரத்த அழுத்தமாகும். அடுத்து உள்ளரங்க காற்று மாசு, புகையிலை, புகைப்பிடிக்கும் பழக்கம், சரியான சாப்பாடு சாப்பிடாதது ஆகியவையும் முக்கியக் காரணங்களாக விளங்குகின்ரன.

பக்கவாத பாதிப்பு

மாரடைப்பு தவிர பக்கவாதம் பாதிப்புக்குள்ளாவோரில் 25 சதவீதம் பேருக்கு காற்று மாசே காரணமாக உள்ளதாம். மேலும், இருதய நோயைச் சந்திப்பவர்களில் 48.6 சதவீதம் பேருக்கும் காற்று மாசே முக்கிய எதிரியாக உள்ளது.

சீனாவில் கட்டுப்பாடு

சீனாவில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு டின்களில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்று விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்த அம்மாநில முதல்வர் ஷீலா தீக்ஷித் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கேள்வியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+