சென்னை வியாசர்பாடியில் தீவிபத்து: 3 மூதாட்டிகள் பலி 5 பேர் படுகாயம்
சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டிகள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
எருக்கஞ்சேரி, பாப்பாத்தி அம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்த 85 வயதான ராஜம்மாள், 76 வயதான சரோஜா, 53 வயதான மீனாட்சி ஆகியோர் தீ விபத்தில் பலியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியாசர்பாடி பகுதியில் திடீரென பற்றிய தீ அக்கம் பக்கத்து குடிசைகளில் மளமளவென பரவியது. இந்த விபத்தில் சில வீடுகள் எரிந்து சாம்பலாயின.
இதில் வயது முதிர்ந்த மூன்று பெண்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீயில் கருகி உயிரிழந்தவர்களில் ஒருவர் மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிபத்து நடந்த பகுதியில் 200 குடிசை வீடுகள் உள்ளன. இது விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications