எப்பப் பார்த்தாலும் சந்தேகம்... கணவர் மீது கொண்ட கோபத்தில் மனைவி தற்கொலை
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனது நடத்தை குறித்து அடிக்கடி சந்தேகப்பட்டு தொல்லை கொடுத்து வந்த கணவர் மீது கொண்ட கோபத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
வாழப்பாடி அருகே உள்ள கோலாத்து கோம்பை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள் (26). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. லோகேஸ்வரன் என்ற மகனும், லோகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
பெரியசாமிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவி வள்ளியம்மாளிடம் தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டும் பேசி வந்தார்.
இதனால் மனம் உடைந்த வள்ளியம்மாள் இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் பெரியசாமியை அழைத்து எச்சரித்து சமரச பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் வழக்கம் போல் குடித்து விட்டு பெரியசாமி வள்ளியம்மாளிடம் தகராறு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் பெரியசாமியின் தொல்லை தாங்காத வள்ளியம்மாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications