பாலச்சந்திரன் படுகொலை- மலேசியாவில் இலங்கை தூதரகம் தாக்குதலுக்குள்ளானது!

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் உதவும் கரங்கள், மலேசிய தமிழர் முன்னேற்ற இயக்கம் ஆகியவற்றின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது மலேசியப் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அதனையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மூன்று பேரை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். இதனால் போலீசாருடன் கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது இலங்கை தூதரகத்தின் முன்பக்கக் கதவை போராட்டக்காரர்கள் உடைத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+