குண்டுவெடிப்பு சம்பவம்: ஹைதராபாத் போலீஸ்- தேசிய புலனாய்வு ஏஜென்சி இடையே அக்கப்போர்!

Subscribe to Oneindia Tamil

Hyderabad blast
ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணையை யார் நடத்துவது என்ற ஈகோ அக்கப்போரை நடத்திக் கொண்டிருக்கிறது ஹைதராபாத் போலீஸும் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ)யும்...

ஹைதராபாத்தில் கடந்த மாதம் 21-ந் தேதி இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 15 தனிப்படைகளை அமைத்து ஹைதராபாத் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சியும் விசாரணை நடத்தியது. பின்னர் தங்களிடம் இந்த வழக்கை ஒப்படைக்கவும் ஹைதராபாத் போலீசிடம் கோரியது. ஆனால் நாங்களே விசாரித்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டது ஹைதராபாத் போலீஸ்.

இதனிடையே டெல்லி திஹார் சிறையில் உள்ள மக்பூல் மற்றும் இம்ரான் கான் ஆகியோரை விசாரணைக்காக ஹைதராபாத் கொண்டு வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறது தேசிய புலனாய்வு ஏஜென்சி. இவர்கள் இருவரிடமும் முக்கிய தகவலைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இதனால் வழக்கை தங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று மீண்டும் ஹைதராபாத் போலீசிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் மீண்டும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டது. உள்துறை அமைச்சகமும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம் பேசியது. ஆனால் ஹைதராபாத் போலீசாராரோ இந்த சிறப்புப் புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது.

வெடிகுண்டு வைத்த தீவிரவாதிகளைப் பிடிக்க வேண்டிய இரண்டு விசாரணை அமைப்புகளும் இப்படி தங்களுக்குள் ஈகோ யுத்தம் நடத்திக் கொண்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+