ஐ.ஆர்.சி.டி.சி. சாதனை: ஒரேநாளில் 5.02 லட்சம் இ-டிக்கெட்டுகள் முன்பதிவு
டெல்லி: ஒரேநாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வெள்ளிக்கிழமை சாதனை படைத்திருக்கிறது.
தட்கல் புக்கிங் மற்றும் பண்டிகை காலங்களில் ஒட்டுமொத்தமாக அனைவரும் புக்கிங் செய்வதால் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இணையதளம் முடங்கிவிடும். இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஐ.ஆர்.சி.டி.சி. இந்த சாதனையை எட்டியுள்ளது என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமீபத்தில் இணையதளத்தின் செயல்திறனை அதிகரிக்கவும், மென்பொருள் லைசென்ஸ்கள், சேமிப்பு பரப்பு நெட்வொர்க் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக ரூ.3 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்போது இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தட்கல் சமயங்களில் முன்பதிவு 40 முதல் 45 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி 4.96 லட்சம் முன்பதிவு செய்யப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. நேற்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டு 5.02 லட்சம் இ.டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications