ஜேபிசியில் ஆ. ராசா சாட்சியமளிப்பது 'தவிர்க்க முடியாதது அல்ல' : பி.சி. சாக்கோ
திருச்சூர்: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜேபிசி) முன்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா சாட்சியமாக அழைக்க அவசியம் இல்லை என்று அதன் தலைவர் பி.சி. சாக்கோ கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கியமானவரான ஆ.ராசா தம்மை சாட்சியாக அழைத்து ஜே.பி.சி. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அப்படி அழைக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறேன் என்றும் மிரட்டியிருந்தார்.
இது தொடர்பாக கேரள மாநிலம் திருச்சூரில் செய்தியாளர்களிட பேசிய சாக்கோ, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனைத்து முக்கிய சாட்சிகளும் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. எனவே இந்தச் சூழ்நிலையில், ராசாவை சாட்சியாக அழைப்பது தவிர்க்க முடியாதது அல்ல. சாட்சியமளிக்க விரும்புகிற அனைவரையும் அழைப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாததாகும். இந்த விவகாரத்தில் ஜே.பி.சி.யின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வரைவு அறிக்கையைத் தயாரிக்குமாறு ஜே.பி.சி. கேட்டுள்ளது. இந்த அறிக்கையை மே 22-ந் தேதி நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிவதற்குள் சமர்ப்பித்தாக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications