ஒருமித்த கருத்து ஏற்பட்டால் பிரதமராக சரத்பவார் பொறுப்பேற்க தயார்: பிரபுல் படேல்

இது தொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:
காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் இணைந்துவிடும் என்று அவ்வப்போது கிசுகிசுக்கள் வருவது வழக்கமாகிவிட்டது. ஆனால் ஒருபோதும் அப்படி நடக்கப்போவது இல்லை.
ஒருவேளை நாட்டின் பிரதமர் பொறுப்புக்கு ஒருமித்த கருத்தாக சரத்பவார் பெயர் பரிந்துரைக்கப்பட்டால் நிச்சயமாக அவர் பிரதமர் பதவியை பொறுப்பேற்பார்.
இதேபோல் ராகுல் காந்தி பிரதமரானால் அவருக்குக் கீழே அமைச்சர்களாகப் பணியாற்ற சரத்பவாரும், பிரபுல் பட்டேலும் தயாராகவே இருக்கின்றனர். ஏனெனில் ஒரு ஆட்சி என்பது பெரும்பான்மை பெற்றிருக்கும் கட்சியால் நடத்தப்படுவதாகும். அந்த வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மிகப் பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி. அதனால் அந்தக் கட்சியின் பிரதமர் யாராக இருந்தாலும் அவருக்குக் கீழே பணியாற்ற நாங்கள் தயார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications