தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! 16 தமிழக மீனவர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது.
ராமேஸ்வரம் கடற்பரப்பில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சுற்றி வளைத்த இலங்கை கடற்படை அவர்களை விரட்டியடித்தது. இதனால் மீன்பிடிக்காமலேயே அவர்கள் கரைக்குத் திரும்பினர்
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 3 தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 பேரும் தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications