7 தமிழருக்கான தூக்கு தண்டனையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: சு.சாமி

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். வருகிற மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வியை தழுவும். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும். இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணையுமா என்பதற்கு ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும்
ஜே.பி.சி. முன்பு ஆஜராக விரும்புவதற்கு பதிலாக ஆ.ராசா சிறப்பு நீதிமன்றத்தில் இந்திய சட்டப்பிரிவு 313ன் கீழ் வாதாடி தெரிவிக்க வேண்டிய விவரங்களை கூறலாம். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி மாநிலத்தை பெற்று தருவதற்காகவே அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவே அண்மையில் சந்தித்து பேசினேன்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் மூவருக்கும், வீரப்பன் கூட்டாளிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டணையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications