தர்மபுரி ஜாதி கலவரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: ராமதாஸ்

புதுச்சேரியில் அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,
அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் 2 முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். எஸ.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சில திருத்தங்கள் வேண்டும். பல மாவட்டங்களில் இந்த சட்டம் தேவையில்லை என்றார்கள். ஆனால் நாங்கள் திருத்தங்கள்தான் கேட்கிறோம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
சில சமுதாய தலைவர்கள் இளைஞர்களை காதல் செய்ய தூண்டுகிறார்கள். டீன் ஏஜ் என்பது காமவலையில் விழும் பருவம். அந்த நேரத்தில் மாணவிகள் பின்னால் சிலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சுற்றுகிறார்கள். சில நாளில் பள்ளி, கல்லூரி சென்ற மாணவி வீட்டிற்கு வரமாட்டாள். அப்போது அந்த மாணவி ஓடிப்போய்விட்டாள் என்று தகவல் வரும். இந்த வலி அனுபவப்பட்ட குடும்பத்தினருக்கு நன்கு தெரியும்.
இதை இப்படியே விட்டால் வருங்காலத்தில் இன்னும் வலி அதிகரிக்கும். இந்த வேலையை நான் தொடங்கியதும் சிலர் இதை நீங்கள் 10 வருடத்துக்கு முன்பே செய்திருக்கலாம் என்றார்கள். தந்தை பெரியார் கூட பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். இளம் வயதில் திருமணம் செய்வதால் பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் பக்தவச்சலம், கோவிந்தராஜ் அடங்கிய பெஞ்ச் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ஒரு பெண் 21 வயது ஆகும்போதுதான் மேஜர் ஆகிறாள் அதற்கு முன்பு இல்லை என்று கூறியுள்ளது. 21 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதலிக்கும் ஆண் வாழ்க்கைக்கு ஏற்றவனா என்று தீர்மானிப்பது கிடையாது.
ஹார்மோன்கள் தூண்டுதலால் திருமணம் செய்துவிட்டு பாதிக்கப்படுகிறார்கள். எனவே சட்ட திருத்தம் செய்ய இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளனர். 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்தால் பெற்றோர் ஒப்புதல் பெறவேண்டும். இல்லையேல் அத்தகைய திருமணம் செல்லாது, அல்லது ரத்து செய்யலாம் என்றும் இந்த தீர்ப்பினை நாடாளுமன்றச் செயலாளருக்கும் அனுப்பிவைக்க கூறியுள்ளனர்.
நாங்கள் ஒன்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டம் அல்ல. அவர்களுக்கு வழிகாட்டுவதாக கூறி சில தலைவர்கள் தவறான வழிக்கு அழைத்து செல்கின்றனர். அந்த இளைஞர்களை நன்கு படிக்க சொல்லுங்கள். வாழ்க்கையில் முன்னேற்றுங்கள். இதுபோன்ற சமூக பிரச்சனைகளில் ஈடுபடவேண்டாம். பிறர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்குபோட்டு அலைக்கழிக்க வேண்டாம்.
எங்களது ஏப்ரல் மாத ஆர்ப்பட்டத்துக்குப்பின் மத்திய மாநில அரசுகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். எங்கள் கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 32 அமைப்புகளை தவிர 81 சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள்.
இவர்களின் வேலை எல்லாம் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம்தான். இதில் எங்களுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் கிடையாது. எங்களின் இந்த இயக்கத்துக்கு பக்கபலமாக அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்களில் சிலர் எங்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். 81 சதவீத மக்கள் ஒட்டுமொத்தமாக கூறும்போது, அவர்கள் எங்கள் வழிக்கு வந்தே ஆக வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு கொடுக்கும் கூட்டத்தை கண்டு காவல்துறையே பயப்படுகிறது. வட மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் இல்லாததால் அங்கு சாதிக் கலவரங்கள் இல்லை என்றார் ராமதாஸ்.
கேள்வி: இது போன்ற சாதிக் கூட்டங்களில் நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கவில்லையே?
ராமதாஸ்: பெரும்பாலான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை ஆதரிக்கின்றனர். ஆனால் எங்கள் கட்சியில் இதை பேச முடியாது. நீங்கள் பேசுங்கள் என்று எங்களை முன்னுக்கு தள்ளுவது அவர்கள்தான்.
கேள்வி: தருமபுரியில் ஜாதி கலவரம் நடைபெற்ற பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு உங்களை மையப்படுத்தியா?
ராமதாஸ்: 144 தடை உத்தரவு போடப்பட்டால் நான் மட்டும் அல்ல, வேறு எந்த தலைவரும் அப்பகுதிக்கு செல்ல முடியாது. தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
-
ராமதாஸுக்கு முட்டுக்கட்டை.. அன்புமணிக்கு எதிரான உரிமையியல் வழக்கிற்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications