நடத்தையில் சந்தேகம்: மாமல்லபுரத்தில் காதல் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை
காஞ்சீபுரம்: மாமல்லபுரத்தில் காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரையும், 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கோவளம் சாலையை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(34). வெல்டிங் வேலை பார்ப்பவர். அவர் அண்ணாநகரைச் சேர்ந்த சாரங்கன் என்பவரின் மகள் ரமணியை(30) காதலித்து கடந்த 2008ம் ஆண்டு மணந்தார். அவர்களுக்கு மைத்ரேயன் (4) என்ற மகனும், சவுஜன்யா (2) என்ற மகளும் உள்ளனர்.
மாமல்லபுரம் மாதா கோவில் தெருவில் இருக்கும் புனித மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார் ரமணி. அவருடைய மகன் மைத்ரேயன் அதே பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். கடந்த சில மாதங்களாக மணிகண்டன் வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லுமாறு ரமணி கண்டித்துள்ளார்.
இது தவிர ரமணி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு மணிகண்டன் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ரமணி பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தார். மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்த மணிகண்டன் வழக்கம்போல் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் படுக்கை அறையில் வைத்து தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்றார். அதன் பிறகு மகனின் கழுத்தையும் அறுத்துக் கொலை செய்தார்.
பின்னர் மகளின் கழுத்தை கையால் நெறித்துக் கொன்றார். மனைவி, குழந்தைகள் இறந்தவுடன் அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை 6 மணிக்கு ரமணியின் தம்பி கோபி அங்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்புறமாக பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக அவர் எட்டிப் பார்த்தார். அப்போது தனது அக்காவின் குடும்பமே பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications