பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்து பெண்கள், குழந்தைகள் உள்பட 48 பேர் பலி
கராச்சி: பாகிஸ்தானின் வர்த்தக நகரமாகன கராச்சியில் இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்து 48 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கடந்த ஒரு வாரமாக ஷியா பிரிவினர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் கராச்சி நகரில் உள்ள அப்பாஸ் டவுன் பகுதியில் ஷியா பிரிவினர் தொழுகை நடத்திய மசூதி அருகே குண்டு வெடிப்பு நடைபெற்றது. கார் ஒன்றில் இந்த குண்டு வைக்கப் பட்டு வெடிக்க வைக்கப் பட்டதாக தெரிகிறது. சுமார் 150 கிலோ வெடி மருந்துகள் மற்றும் ‘பால் பேரிங்' கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த குண்டு வெடித்த ஓசை 10 கி.மீட்டர் தூரம் வரை எதிரொலித்தது.
இந்த பயங்கர குண்டு வெடிப்பில் குழந்தைகள், பெண்கள் உள்பட 48 பேர் உடல் சிதறி பலியாகினர். 140க்கும் மேற்பட்ட படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கராச்சி நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஷியா பிரிவினர் மீது தாக்குதல்
பாகிஸ்தான் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஷியா பிரிவினர் மீது அவ்வப்போது போராளிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதம், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் தாக்குதலில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்க மறுத்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தாக்குதல்களை முறியடித்து ஷியா மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதலில் பல்வேறு போராளி முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications