For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ட்யூஷன் டீச்சரை திட்டமிட்டு கற்பழித்த ப்ளஸ் டூ மாணவன்!

By Shankar
Google Oneindia Tamil News

காஸியாபாத்: தன்னை தண்டித்த ட்யூஷன் டீச்சரை, அவர் தனியாக இருந்த நேரத்தில் திட்டமிட்டு கற்பழித்தான் ப்ளஸ் டூ மாணவன். டீச்சர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் கவிநகர் பகுதியில் வசிக்கும் பி.காம் பட்டதாரியான இளம்பெண் ஒருவர், பகுதி நேர வேலையாக மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கணக்குப்பதிவியல் டியூஷன் கற்றுத் தந்து வருகிறார்.

இவரிடம் படிக்கும் பிளஸ் டூ மாணவன் ஒருவனின் நடத்தைகள் பிடிக்காததால் அவனை டியூஷனுக்கு வரவேண்டாம் என்று அந்த பெண் கடுமையாகக் கூறிவிட்டார்.

நேற்று காலை, அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்துக்கொண்ட அந்த 18 வயது மாணவன், வீட்டிற்குள் நுழைந்து அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளான்.

உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் கவிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டது உறுதியானதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

English summary
UP police arrested a plus two student for raping his tuition teacher.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X