காங்கோவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 36 பயணிகள் பலி, 4 பேர் உயிர் பிழைப்பு
Subscribe to Oneindia Tamil
கோமா: காங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் 36 பயணிகள் பலியாகினர்.
காங்கோவில் தனியார் ஏர்லைன் நிறுவனமான சிஏஏவுக்கு சொந்தமான ஃபாக்கர் சிறிய ரக விமானம் ஒன்று 40 பயணிகளுடன் கிழக்கு கசாய் மாகாணம் லோட்ஜாவில் இருந்து கிளம்பியது. அந்த விமானம் கோமா நகரில் உள்ள தேர்தல் ஆணைய கட்டிடம் அருகே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது. இதில் தரையில் இருந்த மக்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
விமானி விமானம் எந்த கட்டிடம் மீதும் மோதாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் இந்த விபத்தில் 36 பயணிகள் பலியாகினர். 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
கடந்த ஆண்டு புகாவு நகரில் ஏற்பட்ட விமான விபத்தில் அதிபர் ஜோசப் கபிலாவின் பி.ஏ. அகஸ்டின் கடும்பா பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications