தூத்துக்குடி அருகே 8ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 8ம் வகுப்பு மாணவியை கற்பழித்த ஆட்டோ டிரைரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பச்சையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி, அதே பகுதியில் சக்தி என்ற பெண்ணிடம் டியூஷன் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆட்டோ டிரைவராக இருக்கும் சக்தியின் சகோதரர் கோட்டையன்(35) மாணவியை கற்பழித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்ந்து நடந்துள்ளது. இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து கருவை கலைக்க கோட்டையன் மாத்திரை கொடுத்துள்ளார். இதில் மாணவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், கோட்டையனை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications