போர்க் குற்றம்: இலங்கை மீது நடவடிக்கை கோரி ஜெனிவாவில் போராடிய உலகத் தமிழர்கள்

Subscribe to Oneindia Tamil

Tamils agitate in Geneva against SL warcrimes
ஜெனிவா: இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா. சபை சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்தி ஜெனிவாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெனிவா ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக இலங்கை அரசைக் கண்டித்து பேரணியும் நடைபெற்றது. இதில், கனடாவின் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிம் கரியானஸ், பாரீஸ் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பேரணியில் ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கமிட்டனர் தமிழர்கள். இதில், கலந்துகொண்டவர்களில் பலரும், சேனல் 4 வெளியிட்டிருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர்.

இந்தியாவின் நடவடிக்கை என்ன?

செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை அரசின் இன அழிப்பக் கொள்கையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் ஆர்ப்பாட்டம் இது என்றார்.

இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டமும் நடந்து வருகிறது. இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வந்தாலும், அது முழுமையானதாக இருக்குமா என்பதில் ஒரு கேள்விக்குறி இருக்கிறது. இந்தியா ஒரு முன்முயற்சி எடுத்தால் இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+