பணியை செய்யாமல் இழுத்தடிக்கும் அரசு ஊழியர்களுக்கு ரூ.250-ரூ.50,000 அபராதம்
Subscribe to Oneindia Tamil

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், சாதிச் சான்றிதழ், ஓய்வூதியம் உள்ளிட்ட சேவகைளில் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து அரசு அலுவலக ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
பாஸ்போர்ட், ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க காலதாமதம் செய்யும் அதிகாரிகள், பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துவிட்டால் அரசு அலுவலக வேலைகள் தாமதமாவது வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications