புற்றுநோய் நிபுணர் டாக்டர் வி.சாந்தாவுக்கு தமிழக அரசின் அவ்வையார் விருது
சென்னை: 2013-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு, புற்று நோய் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை அடையாறில் உள்ள புற்று நோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது எனும் உயரிய விருது வழங்க முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் சால்வை ஆகியவை வழங்கப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
2013-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு, புற்று நோய் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை அடையாறில் உள்ள புற்று நோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த விருதினை டாக்டர் வி.சாந்தாவுக்கு முதல்வர் ஜெயலலிதா சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி தலைமைச் செயலகத்தில் வழங்கி கவுரவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications