ஹைதராபாத் குண்டுவெடிப்பு எதிரொலி: வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் சோதனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் தமிழகத்தில் பதுங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் தீவிரவாதிகள் மதுரையை தாக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையம், கோவில்கள், பூங்காக்கள், அணை பகுதிகள் என்று பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இது தவிர சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை உள்ளிட்ட பகுதிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications