இலங்கைக் கடற்படையின் இரு வேறு தாக்குதல்கள் - 5 மீனவர்கள் படுகாயம்

ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்ப பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கினர். மீன் பிடி வலைகளை அறுத்து எறிந்தனர். படகின் என்ஜினையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
பின்னர் நான்கு மீனவர்களையும் தாக்கி துரத்தினர். இந்த தாக்குதலில், கிஷோர், வீரமணி, குப்புசாமி, பாண்டி ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோபத்தில் மூழ்கியுள்ளனர்.
காரைக்கால் மீனவர் மீது துப்பாக்கிச் சூடு
இதேபோல நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களுடன் காரைக்காலைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் சென்றார்.
இவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் திடீரென துப்பாக்கி் சூட்டில் இறங்கினர். இதில் காரைக்கால் மீனவரின் முதுகில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார். பின்னர் படகு மீதும் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படகு சேதமடைந்தது.
இந்திய எல்லைக்குள் மீனவர்கள் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications