இலங்கைக் கடற்படையின் இரு வேறு தாக்குதல்கள் - 5 மீனவர்கள் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

Lankan navy attacks Indian fishermen
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் மீதும்,நாகை மாவட்ட மீனவர்கள் மீதும் இரு வேறு இடங்களில் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் குண்டுக்காயம் பட்டு படுகாயமடைந்தார். மற்ற நால்வரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்ப பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கினர். மீன் பிடி வலைகளை அறுத்து எறிந்தனர். படகின் என்ஜினையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

பின்னர் நான்கு மீனவர்களையும் தாக்கி துரத்தினர். இந்த தாக்குதலில், கிஷோர், வீரமணி, குப்புசாமி, பாண்டி ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோபத்தில் மூழ்கியுள்ளனர்.

காரைக்கால் மீனவர் மீது துப்பாக்கிச் சூடு

இதேபோல நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களுடன் காரைக்காலைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் சென்றார்.

இவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் திடீரென துப்பாக்கி் சூட்டில் இறங்கினர். இதில் காரைக்கால் மீனவரின் முதுகில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார். பின்னர் படகு மீதும் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படகு சேதமடைந்தது.

இந்திய எல்லைக்குள் மீனவர்கள் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+