"ஹெராயின்" போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்குகிறார் குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்?

பஞ்சாப்பின் மொகாலி மாவட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் ரூ130 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குடியிருப்புக்கு வெளியே விஜேந்தர்சிங்கின் மனைவியின் கார் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அனுப்சிங் கலோன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் குத்துச் சண்டை வீரர்களான விஜேந்தர் சிங் மற்றும் ராம் சிங் ஆகியோருக்கு போதைப் பொருட்களை தாம் கொடுத்திருக்கிறேன் என்றும் போலீசில் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜேந்தர்சிங் மற்றும் ராம் சிங் இருவரையும் விசாரிக்க பஞ்சாப் போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் தம் மீதான இந்தப் புகாரை விஜேந்தர்சிங் நிராகரித்திருக்கிறார். தமக்கும் அனுப்சிங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றுத் தந்தவர் விஜேந்தர்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications