மகளிர் தினம்: அவ்வையாருக்கு மலர் தூவி, டாக்டர் சாந்தாவுக்கு அவ்வையார் விருது வழங்கிய ஜெயலலிதா

ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று சிறந்த சேவை புரிந்த பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு தமிழக அரசு அவ்வையார் விருது வழங்கி கௌரவிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி கடந்த ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருது ரூ. 1 லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்கம், சான்றிதழ் மற்றும் சால்வை ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருது அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் சாந்தாாவுக்கு விருதை வழங்கி ஜெயலலிதா கௌரவித்தார்.
விருதை பெற்றுக் கொண்ட டாக்டர் சாந்தா முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன் பாராட்டவும் செய்தார். முன்னதாக 11.30 மணிக்கு மகளிர் தினத்தையொட்டி கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் அவ்வையார் சிலைக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செய்தார்.












Click it and Unblock the Notifications