Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை விவகாரம்: லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு பேராட்டம்

Subscribe to Oneindia Tamil

Loyola college students stage sit in protest
சென்னை: இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது மாணவர்கள் சார்பில் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறுகையில்,

இலங்கையில் லட்சக்கணக்கில் நம் தமிழ் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல் என்பதை விட திட்டமிட்ட தமிழின படுகொலை என்பது தான் உண்மை.

இதை பார்த்துக் கொண்டு மத்திய அரசு ஏன் மவுனம் காக்கிறது ஏன்று புரியவில்லை. இலங்கை என்ற நாடு இந்தியாவுடன் ஒப்பிட்டால் ஒரு குட்டித் தீவு தான். அதற்கு ஏன் இந்தியா இவ்வளவு தூரம் பயந்து நடுங்குகிறது?

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும். தமிழ் ஈழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண வேண்டும். தனித் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு.

இதற்காக நாங்கள் கடைசி வரை போராடுவோம். தமிழ் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம். இதற்காக அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராடுவோம் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+