தந்தைக்கு ஜீவனாம்சம் தராத 6 பிள்ளைகள்... வீட்டு சாமான்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்காத 6 மகன்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த வேலூர் மாவட்டம் வாலாஜா கோர்ட், அவர்களது வீடுகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய அதிரடி உத்தரவிட்டது.

வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம் திருப்பாற்கடல் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் வி.ராமகிருஷ்ணன். இவரது 6 மகன்களான அசோகன், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், தயாளன், வேல்முருகன், வரதராஜன் ஆகியோர் இப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், இவர்களுக்கு ராமகிருஷ்ணன் தனது சொத்துகளை பாகப் பிரிவினை செய்துகொடுத்துள்ளார்.

சொத்து கைக்கு வரும் வரை தந்தையை பத்திரமாக காத்து வந்த 6 பிள்ளைகளும், சொத்துக்கள் கைக்கு வந்ததும், தந்தையை நட்டாற்றி விட்டு விட்டனர். சரியாக சாப்பாடு கூட போடுவதில்லையாம். இதைத் தொடர்ந்து, மகன்களிடம் ஜீவனாம்சம் கோரி வாலாஜா குற்றவியல் நீதிமன்றம் 1-ல் ராமகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், மாதம்தோறும் 6 மகன்களும் தலா ரூ.1,000 வழங்க வேண்டும் என 2012ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி உத்தரவிட்டார் ஆனால் அவர்கள் சொன்னபடி வழங்கவில்லை. இதையடுத்து ராமகிருஷ்ணன் அப்பீல் செய்தார்.

இதை விசாரித்த மாஜிஸ்திரேட் காயத்ரி, 6 பேரின் வீடுகளில் உள்ள மின்விசிறி, கட்டில், பீரோ, பித்தளை சாமான்கள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்து மார்ச் 22ஆம் தேதிக்குள் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைக்க வேண்டும் என காவேரிப்பாக்கம் போலீஸாருக்கு அதிரடி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+