பாலியல் கொடுமைகளை களைய ஒருங்கிணைந்து செயல்படுவோம்: ரோசைய்யா
சென்னை: பெண்கள் தான் சமுதாயத்தின் முதுகெலும்பு என்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ரோசைய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
சர்வதேச பெண்கள் தினத்தையட்டி இந்திய மற்றும் வெளிநாட்டு பெண்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் கவுரவத்தை மேம்படுத்தவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும். கல்வி அறிவைப் பெறுவதிலும், தேசிய வளர்ச்சிப் பணியிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதற்கு இந்த நாளில் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமுதாயத்தின் முதுகெலும்பு பெண்கள். பாலின சமத்துவம், பெண்கள் மேம்பாடு ஆகியவைதான் நாட்டை அனைத்து வகையிலும் முன்னேற்ற வாய்ப்பாக அமையும். பெண்கள் எதிர்கொள்ளும் பாலினப் பாகுபாட்டையும், வன்முறை, கொடுமைகள் ஆகியவற்றையும் களைவதற்கான நமது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications