தமிழகம், புதுவை மீனவர்கள் மீதான தாக்குதல்- இலங்கைக்கு நாராயணசாமி கண்டனம்

இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த காரைக்கால் மீனவர் செண்பகம் சென்னையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இன்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தமிழகம் மற்றும் புதுவை பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது இலங்கை ராணுவம் அத்து மீறி அவர்களை தாக்கி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி பலமுறை இலங்கை அரசுடன் பேசி இருக்கிறோம். இருப்பினும் தாக்குதல் என்பது தொடர் கதையாக நடக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசுவதற்கு இலங்கை அரசு ஒத்துக்கொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கேட்டு தலைமை செயலாளருக்கு 2 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications