சாதிக்கு அப்பாற்பட்டது காதல்!: திருமாவளவன்

நெய்வேலியில் என்.எல்.சி. எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு விளக்கவுரை கூட்டத்தில் பேசிய அவர்,
நாடாளுமன்றத்திலும் அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினேன். நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், துணை வேந்தர்கள், மாவட்ட கலெக்டர்கள் போன்ற அதிகார பொறுப்புள்ள பதவிகளுக்கான உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு தயங்குகிறது.
தலித் எங்கும் எப்போதும் முதன்மை இடத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கம் தான் இதற்குக் காரணம்.
காதல் சாதிக்கு அப்பாற்பட்டது. ஒடுக்கப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் வீண் கலவரம் செய்கிறார்கள். தலித் இன மக்களால் எங்கேயாவது, எப்போதாவது கலவரம் ஏற்பட்டதுண்டா?. சாதி வெறி கொண்டவர்கள் முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக இருக்க முடியாது.
ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் மத்திய அரசு மெளனம் சாதிப்பது தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதையே காட்டுகிறது.
இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறும் எண்ணத்தை உருவாக்கி விடாதீர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications