பாஜக பொதுக்குழுவில் தமிழக போலீசாருக்கு கண்டனம்
கரூர்: கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்குழு கூட்டத்தில் தமிழக போலீசார் மீது அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் பாஜக மாவட்டத் தலைவராக இருப்பவர் சிவசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போகின்றது, விவசாயம் பாதிக்கின்றது என்றார். இருப்பினும் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுகின்றது. எனவே, காவிரி அற்றில் மணல் அள்ள தடைவிதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கரூர் மாவட்டத்தில் செயல்பட்ட 7 மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டது. இதனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரும், மணல் வியாபாரிகள் சிலரும் கடும் கோபம் அடைந்து சிவசாமி மீது ஆற்றில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாகக் கூறி போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வாங்கல் காவல் நிலையத்தில் சிவசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கரூரில் நடந்த பாஜக பொதுக்குழு கூட்டத்தில் சிவசாமி மீது போடப்பட்டுள்ளது திட்டமிட்ட பொய் வழக்கு இந்த வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக போலீஸ் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், பாஜக புகாருக்கு கரூர் மாவட்ட போலீஸ் தலைமை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications