சென்னை விமான நிலையத்தில் தீ: விமான சேவைகள் பாதிப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலை 2.45 மணிக்கு திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் 5 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து 20 நிமிடங்கள் போராடு தீயை அணைத்தன.
கட்டுப்பாட்டு அறையில் உள்ள மின்கலன்களில் ஏற்பட்ட மின்கசிவால் பேட்டரிகள் புகைந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் விமானப் போக்குவரத்து சிக்னல்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமாகின. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
லாரியில் மோதி தீப் பிடித்த கார்:
இந் நிலையில் விமான நிலைய வளாகத்தில் இன்று ஒரு காரும் லாரியும் மோதிக் கொண்டதில் கார் தீப்பிடித்துக் கொண்டது.
லாரியின் பின் பக்கத்தில் ஹோண்டா சிட்டி கார் மோதியதில் கார் தீப் பிடித்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications